பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 4 பேர் கைது

காங்கயம், ஏப். 18: காங்கயம், நெய்கடை வீதி பகுதியை சேர்த்தவர் ரஞ்சனிபிரியா(34). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் காங்கயம் பஸ் நிலையத்திற்கு தனது தோழி ஒருவரை அனுப்பி வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த காங்கயம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (27), ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோகுல்கார்த்திக் (22), கோவிந்தராஜ் என்கிற சுரேஷ் (27), ஊதியூர் பகுதியை சேர்ந்த வீராசாமி என்கிற கண்ணன்(24) ஆகிய 4 பேர் ரஞ்சனிப்பிரியாவிடம் வந்து தகாத முறையிலும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஞ்சனிப்பிரியா இதுகுறித்து நேற்று காலை காங்கயம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காங்கயம் போலீசார் நந்தகுமார், கோகுல்கார்த்திக், கோவிந்தராஜ் என்கிற சுரேஷ், வீராசாமி என்கிற கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: