பூரிவாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

பெரியபாளையம்: பூரிவாக்கம் ஊராட்சியில் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர வேணடும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் ஊராட்சியில் சுமார் 3.000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்து மூன்று வருட காலமாக இ சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் உள்புறம் ஆங்காங்கு பழுதடைந்து சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து மழை காலங்களில் தண்ணீர் ஒழுகும்.  மேலும் ஊராட்சி கட்டிடத்தில்  முக்கியமான கோப்புகள் பத்திரப்படுத்த சிக்கல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  மேலும் கட்டிடத்தை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்துள்ளது. சில நேரங்களில் இந்த கட்டிடம் சமூக விரோத செயல்களுக்கும் விஷம் நிறைந்த பாம்புகளுக்கும் இருப்பிடமாக மாறி உள்ளது.  இந்த கட்டிடம் அருகே தொடக்கப்பள்ளி உள்ளது. இதனை அடுத்து தற்காலிகமாக ஊராட்சியில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி நிர்வாகம் இயங்கி வருகிறது. புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தர பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post பூரிவாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: