புதுக்கோட்டைக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள்: திமுகவினருக்கு அழைப்பு

புதுக்கோட்டை, ஆக.27: புதுக்கோட்டைக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரளாக திரண்டு வர வேண்டும் என்று திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் புதுக்கோட்டை சிப்காட்- மருத்துவகல்லூரி செல்லும் சாலையில் இன்று மாலை (ஆக.27ம்தேதி) நடைபெறும் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று மதியம் 2 மணிக்கு வடக்கு, தெற்கு மாவட்ட திமுக, நகர திமுக சார்பில் மச்சுவாடி முக்கம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள், அனைத்து அணி தலைவர் துணைத் தலைவர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், நகர ஒன்றிய பெருந்தலைவர்கள், துணை தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டைக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள்: திமுகவினருக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: