புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

திருவேங்கடம், ஜூலை 7: குருவிகுளம் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், குருவிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் அய்யனார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காருடன் 31.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.

The post புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: