×

பிளஸ் 2 மாணவி மாயம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் கோத்தாபுரத்தைச் சேர்ந்த 17மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் இரவு 9 மணியளவில், வீட்டை விட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர், திருமண ஆசை காட்டி, தங்களது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post பிளஸ் 2 மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Plus 2 ,Krishnagiri ,Kaveripatnam Gothapuram ,Government Higher Secondary School ,Plus 2 Student ,
× RELATED பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர்