பனையூர்a பள்ளி ஆண்டுவிழா

குளத்தூர், அக். 18: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. கிராம தலைவர் பாண்டி தலைமை வகித்து பேசினார். துணை தலைவர் பாலசுப்பிரமணியன், பள்ளி செயலர் ஆதிமாரீஸ்வரன், பொருளாளர் செல்வக்குமார், பாலமுருகன், முத்துவேல், காசிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை திலகச்செல்வி வரவேற்றார். ஆசிரியர் அற்புத சகாயராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியை மரியஅனிதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மணிவேல், முத்துராஜா, மாரிச்சாமி, பெருமாள், பிச்சைக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மற்றும் மாணவர்கள் சிறப்பு குறித்து பேசினர். தொடர்ந்து மாணவர்களின் ஆடல், பாடல், நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார்.

The post பனையூர்a பள்ளி ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Related Stories: