நெல்லை மாநகர திமுக மாணவரணி, மகளிரணி விண்ணப்பங்கள் ஒப்படைப்பு செயலாளர் சுப்பிரமணியன் வேண்டுகோள்

நெல்லை, ஆக. 19: நெல்லை மாநகர திமுக மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் ஆலோசனையில், நெல்லை மாநகரத்திற்குட்பட்ட தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை பேட்டை ஆகிய நான்கு பகுதிகளில் மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ ஆணைக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவரணிக்கு இன்று மாலை 5 மணிக்குள்ளும், மகளிரணி, மகளிர் தொண்டரணிக்கு வருகிற 21ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள்ளும் பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், பாளை அன்டன் செல்லத்துரை, மேலப்பாளையம் சாகுல் ஹமீது, நெல்லை பேட்டை நமச்சிவாயம் (எ) கோபி, மாநகர துணைச்செயலாளர் அப்துல் கையூம் ஆகியோர் மாநகர திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை மாநகர திமுக மாணவரணி, மகளிரணி விண்ணப்பங்கள் ஒப்படைப்பு செயலாளர் சுப்பிரமணியன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: