நெடும்பலம் அரசு பள்ளி மாணவி பேச்சு போட்டியில் முதலிடம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் பரிசு பெற்றுள்ளார்.
முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பிரிவில் நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி ஷே. அஃப்ரீன்பானு பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று ரூ.10,000 பரிசு பெற்றுள்ளார். பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

 

The post நெடும்பலம் அரசு பள்ளி மாணவி பேச்சு போட்டியில் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: