நெடுஞ்சாலைகளில் உள்ள அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: நெடுஞ்சாலைகளில் உள்ள அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் சைவ உணவகங்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மற்றம் செய்துள்ளது. போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் ஒருவரது உணவு உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்க கூடிய தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகள் நிற்க கூடிய உணவன்கள் தொடர்பாக ஒப்பந்த புள்ளிகள், அதற்கான நிபந்தனைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் குறிப்பாக ஒரு உணவகம் எவ்வாறு இருக்க வேண்டும், நெடுந்தூரம் பயணிக்க கூடிய பயணிகளுக்கு எந்த வித தொந்தரவும் கொடுக்காத அளவிற்கு உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக உணவகங்களில் வழங்கப்படும் உணவானது தரம் மற்றும் சுவையுள்ளதாக இருக்க வேண்டும் என்றும், உணவகம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் பிறப்பிக்கபட்டிருந்தது. மேலும் பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கழிப்பிட வசதி இலவசமாக வழங்க வேண்டும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும், பயணிகள் வசதிகாக கழிவறையில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும், உணவகத்தின் அமைப்பு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் நின்று செய்வதற்கு போதுமான இட வசதியுடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவுகள் கொடுக்க பட்டிருந்தன. இதில் ஏற்கனவே ஒப்பந்த புள்ளிகளுக்கு கொடுக்க பட்டிருந்த நிபந்தனையில் சைவ உணவு விடுதிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தற்போதுசைவ உணவு விடுதிகள் என்ற வார்த்தையை போக்குவரத்து துறை நீக்கியுள்ளது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் எதுவாக இருந்தாலும் சுகாதார முறையில் மக்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்த புள்ளிகள் கோரும் உணவகங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. …

The post நெடுஞ்சாலைகளில் உள்ள அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: