உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை: 25 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் வாசிகள் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து கன்னோஜ் டிஎம் கூறுகையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானம் அருந்தி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: