நகை கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

கோவை ஜூன் 20: கோவை செல்வபுரம் அசோக் நகர் பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (52). இவர் சாவித்திரி நகரில் உள்ள ஒரு தங்க நகை கடையில் நகை தொழில் செய்யும் வேலை செய்து வருகிறார். இரவு நேரத்தில் கடை பாதுகாப்புக்காக மகேந்திரன் அங்கேயே தங்கியிருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் கடையில் இருந்தபோது நகைக்கடையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்தார்.  சத்தம் வந்த இடத்திற்கு சென்றபோது அங்கேயிருந்த வாலிபர் ஒருவர் வேக வேகமாக அங்கிருந்து ஓடி தப்ப முயன்றார்.

உடனே மகேந்திரன் கூச்சலிட்டு அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் பிடிக்க முயன்றார். ஆனாலும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மகேந்திரன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்றது முத்துக்குமார் (38) எனவும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

The post நகை கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.