×

தொழிலாளியை தாக்கியவர் கைது

 

தேன்கனிக்கோட்டை, செப்.11: தேன்கனிக்கோட்டை தாலுகா அகலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (40), கூலித்தொழிலாளி. இவர் வளர்த்து வரும் மாடு, பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிர்களை மேய்ந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக, லட்சுமியின் பேரன்களான ஓசூர் அவ்வையார் நகரை சேர்ந்த அபிேஷக் (21), அவரது தம்பி விஜயகுமார் (19), மேலும் இருவர் சேர்ந்து நேற்று முன்தினம் வெங்கடேஷ் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த வெங்கடேஷ், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அபிேஷக்கை போலீசார் கைது செய்தனர். விஜயகுமார் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தொழிலாளியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Venkatesh ,Agalakottai ,Dhenkanikottai taluk ,
× RELATED மின்சாரம் தாக்கி டிரைவர் பலி