தென்காசி மேலப்புலியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தென்காசி, ஜூலை 30: தென்காசி மேலப்புலியூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் முத்து கருப்பசாமி கோயில்களில் கடந்த 12ம் தேதி மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதைத்தொடர்ந்து மண்டல பூஜை நடந்துவரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை 201 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள், குங்குமத்தால் அம்மனை அர்ச்சித்து வழிபட்டனர். முன்னதாக திருவிளக்கு பூஜைக்கு தேவையான பூஜை பொருட்களை கோயில் நிர்வாகத்தினர் வழங்கினர்.

The post தென்காசி மேலப்புலியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: