இந்தியா துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி புதுச்சேரியில் 14வது சட்டப்பேரவை கலைப்பு!: அதிகாரபூர்வ அறிவிப்பு..!! May 05, 2021 புதுச்சேரி நாராயணசாமி காங்கேயம் ஊராட்சி துணை கவர்னர் தமிழ் சௌந்தரராஜன் தின மலர் புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவுப்படி புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி நேற்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள 14வது சட்டமன்றம் துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி மே மாதம் 3ம் தேதி கலைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலாளர் முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விரைவில் புதிய அரசை அமைக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 தொகுதியிலும், சுயேச்சைகள் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே, புதுச்சேரியின் 14-வது சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநரின் ஆணைப்படி மே.3ம் தேதி கலைக்கப்பட்டதாக புதுச்சேரி சட்டப் பேரவை செயலகத்தின் செயலர் முனிசாமி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … The post துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி புதுச்சேரியில் 14வது சட்டப்பேரவை கலைப்பு!: அதிகாரபூர்வ அறிவிப்பு..!! appeared first on Dinakaran.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜே.பி.நட்டா மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின்பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை
அரியானாவில் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை மகளிருக்கு மாதம் ₹2000 நிதியுதவி: காங். தேர்தல் அறிக்கை வெளியீடு
தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஐஜி தலைமையில் தனிப்படை விசாரணை: ஒரு வாரத்தில் முடித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க திட்டம்