தீ விபத்தில் பெண் பலி

திருப்பரங்குன்றம், ஜூலை 31: நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைபாறைபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் செழியன். இவருடைய மனைவி பஞ்சு(33). இவர் நேற்று முன் தினம் அவருடைய வீட்டில் உள்ள சமையலறையில் சமையல் செய்ய அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார். அப்போது சிலிண்டருக்கும் அடுப்பிற்கும் இணைக்கப்பட்டிருக்கும் காஸ் டியூப் திடீரென்று கழன்றது. அதிலிருந்து வெளியேறிய காஸில் தீ பற்றியது. இதில் பஞ்சுவின் ஆடையிலும் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய பஞ்சுவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சு உயிரிழந்தார். சம்பவம் குறித்து கணவர் செழியன் நாமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தீ விபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: