திண்டிவனம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

திண்டிவனம், மார்ச் 7: திண்டிவனம் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார் கொலையா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், அய்யந்தோப்பு அருகே சாலை ஓரம் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக நேற்று காலை ரோசணை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மிதந்த ஆண் சடலத்தை கயிறு மூலம் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் திண்டிவனம் ஆலன் தெரு பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் ராஜேந்திரன்(47) என்பது தெரியவந்தது. இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு செல்லாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். தற்போது விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரனை யாரேனும் அடித்து கிணற்றில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்….

The post திண்டிவனம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் appeared first on Dinakaran.

Related Stories: