தமிழகத்தில் முதல்முறையாக வரும் 15ம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்: 1-5ம் வகுப்பு வரை படிக்கும் 1.14 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்

சென்னை: தமிழகத்தில் திமுக அரசு அறிமுகப்படுத்த உள்ள 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கி வைக்க திட்டமிட்டுள்ளார். திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக வருகிற 15ம் தேதி முதல் செயல்படுத்தபட உள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.* வழங்கப்படும் உணவுதிங்கள்    அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.செவ்வாய்    ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.புதன்    வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.வியாழன்    அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.வெள்ளி    ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களை கொண்டு காலை சிற்றுண்டி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது….

The post தமிழகத்தில் முதல்முறையாக வரும் 15ம் தேதி மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்: 1-5ம் வகுப்பு வரை படிக்கும் 1.14 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர் appeared first on Dinakaran.

Related Stories: