சென்னை தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தது தமிழக அரசு May 20, 2021 தமிழ்நாடு அரசு சென்னை தின மலர் சென்னை: கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்தது. தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு 550 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. எனவே தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. … The post தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தது தமிழக அரசு appeared first on Dinakaran.
மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு
ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது
அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
பெரம்பூரில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு: மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிப்பு
டி.பி.சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது
புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்