தந்தையை மிரட்டி பணம் பறித்தவர் கைது

 

திருச்சி, ஆக.19: திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (73) தையல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரமேஷ் (43) இவர் தனது தந்தையிடம் ₹.500 தரும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர் தர மறுக்கவே, ரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து பாலன் உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்தனர்.

 

The post தந்தையை மிரட்டி பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: