தஞ்சாவூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், செப்.21: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் பணிமனை முன்பு சாம்சங் நிறுவன தொழிலாளிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் திருச்செல்வன், மாநில செயலாளர் ஜெயபால், சிஐடியு மாவட்ட துணை தலைவர் அன்பு, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஆட்டோ செல்வம், மாநகர செயலாளர் வடிவேல், அரசு போக்குவரத்து சங்க மத்திய சங்க பொருளாளர் ராமசாமி, மைய சங்க துணை தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற சங்க திருநாவுக்கரசு, ஜீவா, சௌந்தராஜன் கலந்து கொண்டனர். பணிமனை செயலாளர் பழனிவேல் நன்றி் கூறினார்.

The post தஞ்சாவூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: