சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 குறைந்தது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.504 குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 14ம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.4,869க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.38,952க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்று காலையில் மட்டும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.4,819க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.38,552க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது.அதாவது காலை விலையை விட மாலையில் தங்கம் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் ரூ.4,831க்கும், சவரனுக்கு ரூ.304 குறைந்து ஒரு சவரன் ரூ.38,648க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.504 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது….
The post தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 குறைந்தது appeared first on Dinakaran.