சேலத்தில் மனைவியின் முதல் கணவரது 11 வயது மகள் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சேலம்: சேலம் எருமாப்பாளையம் ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சதிஷ் (27). பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண் கணவனை பிரிந்து குழந்தைகளுடன் சதீசிடம் வந்து விட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அந்த பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த 11 வயது சிறுமியிடம், சதீஷ் சில்மிஷத்தில் ஈடுபட துவங்கினார். அதை தாயிடம் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியும் வந்துள்ளார். இதனிடையே, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்து கடும் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் தாய், இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சதிசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ததால், சதீசுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த 2018 டிசம்பர்  முதல், சேலம் மத்திய சிறையில் தான் இருந்து வருகிறார். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், சிறுமியை பலாத்காரம் செய்த சதிசுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். …

The post சேலத்தில் மனைவியின் முதல் கணவரது 11 வயது மகள் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: