சேரன்மகாதேவி அருகே மாடு, கோழிகள் திருடியவர்களுக்கு வலை

நெல்லை, ஜன. 19: சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நம்பி (53). இவர் தனது வீட்டருகே ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வரும் நிலையில் கடந்த 14ம் தேதி கோழிகளை கூண்டுகளிலும் ஆடுகளை பட்டியலிலும் அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்கச் சென்றார். மறுநாள் காலை திரும்பியபோது அங்கிருந்த ஒரு மாடு மற்றும் 4 ேகாழிகள் மர்மநபர்களால் திருடுப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். பின்னர் இதுகுறித்து நம்பி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த சேரன்மகாதேவி போலீசார், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து மாடு, கோழிகளை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.

The post சேரன்மகாதேவி அருகே மாடு, கோழிகள் திருடியவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: