சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128-க்கு விற்பனை

சென்னை: தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை.  தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை, மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுப முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,700 குறைந்து ரூ.70,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் அதிகரித்து ரூ.71-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.71,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. …

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: