×

சுரங்கப்பாதையில் சிக்கிய சிமென்ட் கலவை வாகனம்

ஆலந்தூர்: மயிலாப்பூரில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை நோக்கி சிமென்ட் கலவை வாகனம் ஒன்று நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது. கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் செல்லாமல் மேம்பாலத்தின் கீழ் உள்ள பூங்கா வழியாக சென்று, சுரங்கப்பாதையில் நுழைந்தபோது அதன் மேல் தளத்தில் சிக்கிக் கொண்டு பாதி வழியிலேயே நின்றது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் டிரைவர் கார்த்திக் திண்டாடினர். அவர், வாகனத்தை வெளியே கொண்டுவர முன்றும் முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போக்குவரத்து போலீசார் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் சிமென்ட் கலவை வாகனத்தை பின்நோக்கி நகர்த்தி வெளியே கொண்டு வந்தனர்.  இதை பூங்காவில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்க கூடியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது….

The post சுரங்கப்பாதையில் சிக்கிய சிமென்ட் கலவை வாகனம் appeared first on Dinakaran.

Tags : Alandur ,Mayilapur ,Kindi Vorpate ,Dinakaran ,
× RELATED ஆலந்தூர் அம்மா உணவகத்தை முழுமையாக...