×

ஆலந்தூர் அம்மா உணவகத்தை முழுமையாக நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள இணையதள பதிவு: ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், அதிமுக ஆட்சியில் வழங்கியதை போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆலந்தூர் அம்மா உணவகத்தை முழுமையாக நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alandur ,Amma ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Dinakaran ,
× RELATED ரூ60 லட்சம் வரி பாக்கி: நங்கநல்லூரில் 2 தியேட்டருக்கு சீல்