×

டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது

அண்ணாநகர், செப்.21: ஆவடி பகுதியை சேர்ந்த துரைராஜ் (64) என்பவரின் மகனுக்கு, டாக்டர் சீட் வாங்கி தருவதாக, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்த இளங்கோ (41) என்பவர் கூறியுள்ளார். இதற்காக, துரைராஜிடம் இருந்து ரூ.13 லட்சத்தை வாங்கியவர், சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்போதே இளங்கோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த இளங்கோ, இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாமல் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவானார்.

அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என அரும்பாக்கம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான இளங்கோ சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக அரும்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று இளங்கோவை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்றுமுன்தினம் சென்னை கொண்டு வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Tags : Absconder ,Annanagar ,Ilango ,Arumbakkam ,MMDA Colony ,Durairaj ,Avadi ,
× RELATED வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு...