×

கடிக்க வந்த நாயை கல்லால் அடித்ததால் முதியவரை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற நபர் கைது

சென்னை: எழும்பூர் டாக்டர் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்நத்வர் சேகர் (65). இவர் தனது வீட்டு வாசலில் இருந்த போது, அதே குடியிருப்பின் 12வது மாடியில் வசித்து வரும் முனீஷ்குமார் என்பவரின் வளர்ப்பு நாய் கடிக்க முயன்றுள்ளது. இதனால் அச்சமடைந்த சேகர் அருகில் உள்ள கல்லை எடுத்து நாயை அடித்துள்ளார். இதனால் நாயின் உரிமையாளரான முனீஷ்குமாருக்கும், சேகருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த குடியிருப்பு வாசிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சேகர் குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள மரத்தை நேற்று முன்தினம் வெட்டி கொண்டிருந்தார். அப்போது முனீஷ்குமார் முன்விரோதம் காரணமாக சேகரை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த சேகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் படி எழும்பூர் போலீசார் நாயின் உரிமையாளரான முனீஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

The post கடிக்க வந்த நாயை கல்லால் அடித்ததால் முதியவரை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற நபர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sernathwar Shekhar ,Dr. Santosh Nagar ,Egmore ,Munishkumar ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...