சென்னை: தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்குவதில் அதிகாரிகள்
பாரபட்சம் காட்டுவதாக அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பணிக்கான பயிற்சி நடக்கும் போதே தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான தேர்தல் பணி ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை என அவர் புகார் கூறியுள்ளார்.