சிவகங்கையில் இ.கம்யூ ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூலை 31:சிவகங்கை அரண்மனைவாசல் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மருது தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில செயலாளர் கண்ணகி, சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்கைசேகரன், சந்திரன், ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பு, மாதவன், நகர துணை செயலாளர் சகாயம், பாண்டி, ஆட்டோ சங்க நகர செயலாளர் பாண்டி, குஞ்சரம்காசிநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் இ.கம்யூ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: