சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது

ஆத்தூர், ஜூலை 10: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மும்முடி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் ெதாந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில், வழக்கு பதிவு செய்து, மும்முடி பகுதியை சேர்ந்த செல்வகுமார் (28) என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில், சிறுமியிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: