சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

பாலக்கோடு, செப்.21: பாலக்கோடு தாலுகா, வாழைத்தோட்டம் கிராமம், ஜோடிசுனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தினமும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் நாய், கோழிகளை குறிவைத்து வேட்டையாடி வருவதாகவும், விநாயகம் என்பவரின் வீட்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கோழிகளையும், 4 நாய்களையும் கடந்த 2 மாதத்தில் வேட்டையாடி உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் வளர்த்து வந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது. மேலும் மாது என்பவரின் வீட்டில் வளர்த்து வந்த 3 நாய்களையும், 15க்கும் மேற்பட்ட கோழிகளையும் வேட்டையாடி உள்ளது. இந்த வழியாக குழந்தைகள் தினமும் பள்ளிக்கு சென்று வருவதால், உயிர் பலி ஏற்படுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வாழைத்தோட்டம், ஜோடிசுனை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: