டெல்லி: தாஜ் மகாலின் நிறம் மாறி வருவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பாதிக்கப்பட்டு வருவதாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாஜ் மகால் முதலில் மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும் ஆனால் தற்போது அரக்கு நிறமாகவும், பழுப்பு நிறமாகவும் மாறி வருவது கவலை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவிக்கின்றனர்.