சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஜூலை 7: பெங்களூரு  நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர்(45). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கிருஷ்ணகிரியில் உள்ள பல்பொருள் அங்காடி முன் சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: