சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

காங்கயம், செப். 17: காங்கயம் நகராட்சியில் நேற்று காலை 11 மணி அளவில் தூய்மை நகருக்கான தூய்மையே சேவை 2024 என்ற திட்டத்தின் கீழ் பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் மற்றும் தூய்மையே சேவை 2024 உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகர் மன்ற தலைவர் சூர்ய பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வகித்தார். அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் செயலாக்கம் செய்யும் பணிகளை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: