கோவை அருகே அரளி விதை குடித்து பெண் சாவு

 

தொண்டாமுத்தூர், ஜூன் 19: கோவை அருகே ஆறுமுக கவுண்டனூர் பொம்மண்ணன் வீதியை சேர்ந்தவர் திலகவதி (58). தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் தூய்மை பணியாளர். இவரது கணவர் பாஸ்கர். இறந்துவிட்டார். திலகவதி இளைய மகன் நந்தகுமாருடன் வசித்து வந்தார். இவர் தைராய்டு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
நோய் தீராததால் விரக்தியடைந்த திலகவதி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post கோவை அருகே அரளி விதை குடித்து பெண் சாவு appeared first on Dinakaran.

Related Stories: