கொங்கு மண்டலம் திமுக கோட்டை என நிரூபித்து உள்ளோம்

 

கோவை, ஜூன் 5: கொங்கு மண்டலம் திமுக கோட்டை என்பதை நிருபித்து உள்ளதாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையத்தில் நிருபர்களிடம் ஈஸ்வரசாமி கூறுகையில், “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் செய்துள்ள சாதனைகள் காரணமாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.

இது திராவிட மாடல் ஆட்சியின் சான்றாக விளங்குகிறது. தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்று ஒன்றாக நிறைவேற்றப்படும்.  குறிப்பாக, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குனியமுத்தூர், உடுமலை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும்.

திமுக அரசு பெண்களுக்கான அரசாக இருந்து வருகிறது. முதல்வர் மகளிர் உரிமை திட்டம், இலவச பேருந்து திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இது கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றுள்ளது. மேலும், கொங்கு மண்டலம் திமுக கோட்டை என மீண்டும் நிரூபித்து உள்ளோம்’’ என்றார்.

The post கொங்கு மண்டலம் திமுக கோட்டை என நிரூபித்து உள்ளோம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.