புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகம் சார்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தமிழகம் உட்பட மொத்தம் 28 மாநிலங்களுக்கு கூடுதல் தவணை வரி பகிர்வு நிதியாக ரூ.1.16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.4.758.78 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது மாநிலங்களின் முதலீடு மற்றும் வளர்ச்சி செலவினங்களை வலுப்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது….
The post கூடுதல் தவணை வரி பகிர்வு தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு appeared first on Dinakaran.