கூடலூர் வேலி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

 

கூடலூர், ஜூலை 13: கூடலூர் வேலி ரோட்டரி சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில், புதிய தலைவராக ஜான்சன், செயலாளர் சுபேர் அகமது, பொருளாளர் சம்பத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அருள் ஜோதி கார்த்திகேயன், ஆளுநர் டாக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், துணை ஆளுநர்கள் முரளிதரன், அசோக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நீலகிரி ரிச்மண்ட் ரோட்டரி சங்க தலைவர் அகிலேஷ், பொருளாளர் சலீம், செயலாளர் சுபாஷ், கிளப் நிர்வாகி அஜிலால் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

The post கூடலூர் வேலி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: