கூடலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஊட்டி, ஆக.24: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நீலகிரி மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நாளை 25ம் தேதி கூடலூர் மைசூர் சாலையில் பழைய இந்தியன் வங்கி பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ் பங்கேற்று குறைகளை கேட்க உள்ளார். எனவே, அன்றைய தினம் கீழ் கூடலூர், கூடலூர் நகரம், கூடலூர் நகரம் தெற்கு, தேவர்சோலை, மசினகுடி, பந்தலூர், சேரம்பாடி, அய்யன்கொல்லி மற்றும் உப்பட்டி பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

The post கூடலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: