காரைக்கால் : காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ்.இவரது மனைவி புனிதவள்ளி. கோட்டுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.புனிதவள்ளிக்கும் அவர் பணிபுரியும் சுகாதார மைய மருத்துவ உதவியாளர் அப்பு (எ) ராஜேஷுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் புனிதவள்ளி தகராறு தொடர்பாக தான் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷாவிடம் புகார் அளித்துள்ளார்.பின்னர் இருவரையும் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து செவிலியர் புனிதவள்ளி கடந்த சில நாட்களாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார்.இந்நிலையில் புனிதவள்ளி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து புனிதவள்ளி கணவர் ரமேஷ் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புனிதவள்ளியின் சடலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த செவிலியர் புனித வள்ளியின் கணவர் ரமேஷ் மற்றும் உறவினர்கள் புனிதவள்ளியின் உடலை வாங்க மறுத்து, புனிதவள்ளியை தற்கொலைக்கு தூண்டியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரில் கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷா மற்றும் அதே மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரியும் அப்பு (எ) ராஜேஷ் ஆகிய இருவரும் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
…
The post காரைக்காலில் அரசு செவிலியர் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர், உதவியாளரை கைது செய்ய வேண்டும்-செவிலியரின் கணவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.