காரமடை அரங்கநாத சுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

 

காரமடை, பிப்.19: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாசிமக திருத்தேர் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள், தாசர்களின் சங்கு, சேகண்டி முழங்க, வானில் கருடன் வட்டமிட கருடன் உருவப்படம் பொறித்த கொடியானது வேத விற்பன்னர்களால் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.

தொடர்ந்து, நேற்றிரவு அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையடுத்து வரும் 23ம் தேதி வெள்ளியன்று திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு வரும் 24ம் தேதி சனிக்கிழமையன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், எம்.எம்.ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன், காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், துணை தலைவர் மல்லிகா, திமுக காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் சிறப்பாக செய்திருந்தார்.

The post காரமடை அரங்கநாத சுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.