காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை,ஆக.20: காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சியில் உள்ள துலுக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறனர். இவர்கள் தினசரி நகரை நோக்கி தினசரி வேலைக்கும், விவசாய வேலைக்கும், பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் சென்று வரும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் கிடக்கிறது.

சாலை ஓரத்தில் கருவை மரங்கள் வளர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது பட்டு காயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்கள் சறுக்கி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நேரில் ஆய்வு செய்து பழுது அடைந்து உள்ள சாலையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: