களக்காடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

களக்காடு,ஜூலை 8: களக்காடு அருகே பெண்களை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள மாவடி எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). தொழிலாளி. இவரது அண்ணன் சுயம்புலிங்கத்தின் மகன் பிலிப் (26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பெண்களை கிண்டல் செய்துள்ளார். இதனையறிந்த ராம
கிருஷ்ணன், பிலிப்பிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பிலிப், ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ராமகிருஷ்ணன் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார். இதனை

தொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிலிப், சாலைப்புதூரை சேர்ந்த சேர்மதுரை மகன் விஸ்வா என்ற விஜயநாராயணன், 16 வயது சிறுவன் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிலிப் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: