ஓமலூரில் வீடுகளில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது

ஓமலூர், ஜூலை 6: ஓமலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத மது விற்பனையை தடுக்க இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில், பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சின்னஅடைக்கனூரில் மது விற்பனை செய்த சபீனாமேரி (30), காமலாபுரம் வெங்கடாசலம் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களது வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி, டீ விற்பனை போல டம்ளர்களில் மதுபானத்தை சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்துது. அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

The post ஓமலூரில் வீடுகளில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: