கல்விக்கடன் வட்டி ரத்து விவகாரம் மாநிலங்களவையில் திமுக.வுக்கு அதிமுக ஆதரவு

புதுடெல்லி :  மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா, கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் நிலை குறித்து பேசியதாவது: வங்கிகளில் கல்விக் கடனை பெறும் மாணவர்கள் அதனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்த முடியாததால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். கல்விக் கடன் பெற்ற தேதியில் இருந்து அதனை திரும்ப செலுத்த தொடங்குவது வரை உள்ள இடைப்பட்ட ஆண்டிற்கான வட்டியை வங்கிகள் சேர்த்து வசூலிக்கின்றன. இதனால் கல்வி கடன் பெற்றவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே கல்விக் கடன் மீதான வட்டித் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு அதிமுக  எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: