ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி ஆய்வு

ஒட்டன்சத்திரம், செப். 7: ஒட்டன்சத்திரம் ஒன்றியம் லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது வீடு கட்டும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றிய பொறியாளர் விஜயராகவன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: