உறைபனியால் மகசூல் இழப்பை தவிர்க்க தேயிலை செடிகளை கவாத்து செய்யும் விவசாயிகள்

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் உறைபனி நிலவி வருவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதை  தவிர்க்கும் வகையில், விவசாயிகள் தேயிலை செடிகளை கவாத்து செய்யும் பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 2வது வாரத்தில் இருந்து பனிப்பொழிவு இருந்து வருகிறது. கடந்த  மாதத்தில் அவ்வப்போது சில நாட்கள் லேசான மழை பெய்த நிலையில் பனியின்  தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக  உறைப்பனி பொழிவு தீவிரமடைந்துள்ளது. தாவரவியல்  பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில்  உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டி வருகிறது. உறைபனியால் புற்கள், செடி கொடிகள் கருகி வருகின்றன. சோலூர், கோக்கால், நுந்தளா, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர்  பரப்பளவில் உள்ள தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன. உறைபனி பொழிவு  தீவிரமாக இருப்பதால், தேயிலை செடிகள் கருகி மகசூல் குறையும் என்பதால்,  பெரும்பாலான தேயிலை விவசாயிகள் செடிகளை கவாத்து செய்யும் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், தேவர்சோலை, மஞ்சூர்,  பெங்கால்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில்  உள்ள தேயிலை செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பனியால் தேயிலை வளர்ச்சி தடைபட்டு தேயிலை மகசூல் வெகுவாக  பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக  இரவு நேரங்களில் அதிக பனி பொழிவு காணப்படுவதால் குளிர்  வாட்டியெடுக்கிறது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ள  நிலையில், குளிரும் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டி, பைக்காரா, தலைகுந்தா,  சாண்டிநல்லா போன்ற பகுதிகளில் பனிக்காற்று வீசி வருகிறது. பகல் நேரத்தில்  வெயில் அடித்த போதிலும் பனிக்காற்று வீசுவதால் குளிர் காணப்படுகிறது. தோட்ட  வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்….

The post உறைபனியால் மகசூல் இழப்பை தவிர்க்க தேயிலை செடிகளை கவாத்து செய்யும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: