உறுப்பினர்களுக்கு டெபாசிட் தொகை

நாமக்கல், ஜூலை 8: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விசாரணை முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சங்கத்தில் டெபாசிட் செய்துள்ள உறுப்பினர்களுக்கு, டெபாசிட் தொகையை திருப்பி வழங்கும் பணியினை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு டெபாசிட் தொகையை வழங்கும் பணியை, நேற்று தொடங்கி வைத்தார்.

The post உறுப்பினர்களுக்கு டெபாசிட் தொகை appeared first on Dinakaran.

Related Stories: