திண்டிவனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திண்டிவனத்தில் பாமக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன, பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மற்றும் கரூரில் பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.